தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அபராதம்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

வருடத்தில் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு 1,243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்றுக்கு 179 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல், தங்கப் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், மூன்றாம் தரப்பினரால் நேரடியாக இறக்குமதி செய்யாமல் வாங்கும் தங்கத்திற்கான உற்பத்தி அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு அபராதங்கள் வசூலிக்கும் என்றார்.

அரச வருமான இழப்பு தொடர்பான ஓட்டைகளை மூடி, படிப்படியாக, நாட்டின் அரச வருமானத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தங்கப் பொருட்களை இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட சில தரப்பினர் இதை பெரிய மோசடியாக மாற்றிவிட்டதால், இதை சுற்றி ஒரு மாஃபியா உள்ளது.

இது குறித்து அரசின் கவனத்திற்கு வந்த முதல் கட்டத்தில் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் என பல்வேறு மட்டங்களில் இருந்ததாகவும் இந்த சவால்கள் அனைத்திலும் சளைக்காமல் அரசாங்கம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டில் தங்க கடத்தலை தடுக்கும் நோக்கில்,  ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து,  விசேட வர்த்தமானி அறிவிப்பு    ஒன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply