இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்கின்றார் சமல்

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனதுறை அமைச்சராக பதவி வகிப்பார்
.
இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சமல்ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir