கொரோனா பரவல் அதிகரித்தால் ஓ.எல் பரிட்சை பிற்போடப்படலாம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதில் மேலும் ஆபத்து ஏற்பட்டால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கொரோனா நிலமைகளை கருத்தில் கொள்வதன் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி 18 முதல் 27 வரை நடத்தலாமா என்பது குறித்த இறுதி முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தா பண்டார எழுப்பிய கேள்விக்கு கல்வி பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir