வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்

கொரோனா அச்சம் அதிகரித்து வந்த நிலையில், வாகன இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்ததால் ஜப்பானிய வாகன இறக்குதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்ட வாகனங்களை மட்டுமாவது இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir