மன்னார் காற்றாலை மின் நிலையம் இன்று திறப்பு

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30க்கு இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொள்கிறார்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir