100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும், 3 விசேட விமானங்கள் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்துள்ளனர்.

இதன்படி சிங்கப்பூரில் இருந்து 8 பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 50 பேரும், கட்டார் தோஹா நகரில் இருந்து 42 பேரும் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும், கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள கொழும்பு தனியார் வைத்தியசாலை பணியாளர்களினால் பி.சி.ஆர்.பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir