சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது

தீர்வை வாி செலுத்தாது நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மேலும் 847 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (14) பிற்பகல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் வசமிருந்த 200 கிலோ கிராம் மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் ,சிலாவத்துறை ,அாிப்பு கடற் பிரதேசத்தில் மேலும் 647 கிலோ கிராம் மஞ்சளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பங்கதெனிய மற்றும் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

You May Also Like

About the Author: kalaikkathir