கொரோனா தொற்று பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) மட்டும் 140 பேர் டுபாயிலிருந்தும், 137 பேர் கட்டாரிலிருந்தும் நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நாடு திரும்பிய அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 531 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
