மேலும் 205 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 205 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்தும் 163 பேர், ஜப்பானிலிருந்து 42 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir