முகக் கவசம் அணியாத 1060 பேர் கைது

முகக் கவசம் அணியாத 1060 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 1060 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 550 பேருக்கு மேற்கொண்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 510 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெறவுள்ளது என காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir