சடலமாக மீட்கப் பட்ட கரும்புலி

மாத்தளை ஓவல பிரதேசத்தில் சிறு மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கரும்புலியொன்று நஞ்சூட்டல் காரணமாக இறந்துள்ளதாக மரணப் பாிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த புலியின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டின் போிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன்னும் கைது செய்யப்பட்டு பலத்த நிபந்தனைகளின் போில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மாத்தளை மாவட்டத்தினுள் நிகழ்ந்த இரண்டாவது கரும்புலி மரணமாக இது பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir