இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 525 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,023 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir