இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

குறித்தபிரதேசங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது அடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir