மருந்தினை வழங்க கோரி சீனாவிற்கு ஜனாதிபதி கடிதம்!

கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குமாறு கோரும் கடிதமொன்றினை இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சீன ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்,

சீனாவிற்கான புதிய இலங்கை தூதுவர் பாலித கோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சை சேர்ந்த அதிகாரியொருவரை சந்தித்தவேளை பாலித கோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலவரம் மற்றும் சீனாவில் தனது முன்னுரிமைகள் குறித்து பாலித கோஹன தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொரோனா வைரஸ்மருந்துகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து சீனாவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் குறித்து பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியிடமிருந்து சீன ஜனாதிபதிக்கு விசேட பரிசொன்றையும் செய்தியொன்றையும் கொண்டுவந்துள்ளதாக பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir