யாழில் களைகட்டும் தைத்திருநாள் பண்டிகை

நாளைய தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு யாழ்.மாவட்ட மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

நாளைய தைத்திருநாளை முன்னிட்டு யாழ்.மாவட்ட மக்கள் தைத்திருநாளுக்கான கரும்பு , பொங்கல் பானைகளை உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரனமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் பூட்டப்பட்டதால் வியாபாரிகள் வீதி ஓரங்களில் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் நடமாட்டம் அதிகரித்து கானப்படுவதால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மக்கள் ஒன்றுகூடுவதை தடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir