சிவனொளிபாதமலை சென்ற இருவர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (14) திகதி இரவு 10 மணியளவில் நல்லத்தண்ணி காவல்துறையினர் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரண்டு இளைஞர்களை சோதனையிட்ட போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ, தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir