வரும் மாகாணசபை தேர்தலில் வடக்கு முதலமைச்சர் வேட்ப்பாளர் இவர் இல்லையாம் !

அரசியலில் ஈடுபடும் எந்தவிதமான யோசனைகளும், எண்ணமும் எனக்கு இல்லை, நான் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஓய்வு பெற்ற அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் அரச அதிபராக இருந்து ஓய்வுபெற்ற நாகலிங்கம் வேதநாயகன் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

அச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக என்னுடன் எதுவும் பேசப்படவில்லை, யாரும் என்னை தேர்தலில் போட்டியிட அழைக்கவில்லை, எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை“ எனவும் குறிப்பிட்டார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir