இன்று முதல் மீள திறக்கப்படும் மிருக காட்சி சாலைகள்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மிருகக்காட்சிசாலைகளை இன்று முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும், அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள், காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பின்னவளை, ரிதியகம, தெஹிவளை ஆகிய மிருகக்காட்சிசாலைகள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இன்று முதல் மீள திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir