2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு யோசனைக்கு அனுமதி

இலங்கை காவல்த்துறையினருக்கு தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக போதுமானளவு வாகனங்கள் இன்மை பெரும் குறையாக உள்ளது.

இதற்கு துரித தீர்வாக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் சட்ட அமுலாக்கல் மற்றும் சட்ட ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனமான இலங்கை காவல்த்துறையினருக்கு இது பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir