நாட்டில் மூன்று பகுதிகள் தொடர்ந்தும் முடக்கம்

நாட்டில் மூன்று பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின், பள்ளியாகொட்டுவ மற்றும் கல்ஹின்ன ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்து முடக்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir