வெளிநாடுகளில் இருந்து மேலும் 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir