42 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பலி !

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மொத்தமாக 19கோடியே 67இலட்சத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 17கோடியே 81இலட்சத்து 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir