கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 66ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 14ஆயிரத்து 135பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11ஆயிரத்து 434பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir