நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நிரவ் மோடிக்கு அனுமதி

நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை விசாரித்த லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நிரவ் மோடி சார்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடி, இந்தியாவிற்குச் சென்றால் தற்கொலை செய்து கொள்ள அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி மார்டின் சாம்பர்லின் நாடு கடத்தலை எதிர்த்து, நிரவ் மோடி மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது, நிரவ் மோடியை நாடு கடத்தும் மத்திய அரசின் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்திஉள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir