இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,735 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 31 பேர் கடற்படையினர் எனவும், 19 பேர் கட்டாரிலிருந்து வந்தவர்கள் எனவும், 02 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,735 பேரில் தற்போது 888 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 836 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 66 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.