பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவேன் – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இல்லையெனில், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி ஏற்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir