மின்சார வாகன இறக்குமதி – அமைச்சரவையின் தீர்மானம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பூரண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை மேலும் நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 2023 செப்டம்பர் 23 வரை மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் தமது பணத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும், என முன்னர் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது குறித்த திட்டத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T04

You May Also Like

About the Author: digital

Leave a Reply