ஜஸ்டின் ட்ரூடோவின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிக்கை – இலங்கை அரசு கண்டனம்

மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிற்காகவும் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது, என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கனடா பிரதமர் விடுத்துள்ள குறித்த அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மே 18 ஆம் திகதியன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறியொன்றை வெளியிட்டிருந்தார்.

இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூருகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை உட்பட பல சம்பவங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன, பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பல தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள், மனித உரிமைகள், சமாதானம், ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன. இதன் காரணமாகவே கடந்த வருடம் மே18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம்.

மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிற்காகவும் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது, என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குறித்த அறிக்கைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளிற்கு உதவியாக அமையாது என அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply