அப்பிள் – செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதற்காக சிப்மேக்கர் பிராட்காமுடன் பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், குறித்த இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் 5ஜி சாதனங்களுக்கான பாகங்களை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 430 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்காக 2021 இல் அறிவித்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

வொஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையே தொழில்நுட்பத் துறையை மையமாகக் கொண்ட வர்த்தக வரிசை தீவிரமடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சீனாவின் சிப் தயாரிக்கும் தொழிலுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், குறைகடத்தித் துறையை மேம்படுத்த பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா முதலீடு செய்யும் நடவடிக்கையானது நீண்ட காலமாக தொடர்ந்துவருகின்wமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply