செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் மாயம்!

துனமலை நீர் அளவிடும் நிலையத்திற்கு அருகில் உள்ள அத்தனகல்ல ஓயாவில் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர், கெசல்வத்தை, குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதான பாத்திமா ஃபஸ்லா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போன பெண் தனது இரு நண்பர்களுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அவர்களுடன் அத்தனகலு ஓயாவிற்கு அருகில் சென்றுள்ளதுடன் அங்கு செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறி தண்ணீரில் விழுந்து காணாமல் போயுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படை நீர்மூழ்கிக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply