யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடமாடும் சேவை குருநகர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, வட்டாரம் 23 மற்றும் 26 ஆம் வட்டாரங்களுக்கான ஆதனவரி அறிவித்தல் படிவம் பெயர்மாற்ற விண்ணப்பப் படிவம் வழங்கல், துவிச்சக்கரவண்டி உரிமம் வழங்கல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்களால் இதுவரை காலமும் செலுத்தாதுள்ள ஆதனவரி நிலுவைகள் மற்றும் நடப்பாண்டு ஆதனவரி, நீர் வழங்கல் கட்டணங்கள் செலுத்துதல் போன்றவற்றைப் பெற்று யாழ் மாநகர சபையின்  அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித்தப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டின் ஆதனவரியை முழுமையாக செலுத்தும் பட்சத்தில் மூன்றாம், நான்காம் காலாண்டுக்கான ஆதனவரியின் 5 சதவீத கழிவினை பெற்றக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply