பூநகரியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை பூநகரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் பூநகரியில் திரண்டிருந்தனர்.

குறித்த கூட்டமானது மாலை 5மணிக்கு பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் சிறப்புரைகளை கலந்து கொண்ட வேட்பாளர்களான சிவஞானம் சிறீதரன், சுமந்திரன், சசிகலா ரவிராஜ்,ஆர்னோல்ட் ,வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் தமிழரசுக்கட்சி பூநகரி பிரதேச கிளையின் தலைவர் குபேந்திரன், முன்னாள் பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி தில்லை நாதன், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பலவற்றில் தலைவராக இருந்த இரத்தினமணி ஆகியோர் நிகழ்த்தினர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்

You May Also Like

About the Author: kalaikkathir