
தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் கொரோனா மத்திய நிலையமொன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த மத்திய நிலையம் நாளை தொடக்கம் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.