கொரோனா புள்ளிவிபரங்கள் ; ஊடகமொன்றின்மீது கோட்டா அதிருப்தி

நாட்டின் கொரோனா நிலைமை குறித்து ஒரு குறிப்பிட்ட ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த செய்தியில் கொரோனா தொற்று தொடர்பில் பிழையான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்கள் குறித்த துல்லியமான மற்றும் தெளிவான தகவல்களைப் பெற அனைத்து வழிகளும் கிடைத்திருந்தாலும், உண்மைகளை தவறாக சித்தரிப்பது பொதுமக்களின் அமைதியின்மை மற்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை வெற்றிகரமாக இருந்தாலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவது ‘மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir