
கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித் துள்ளது.
இதற்கமைய கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை ஞாயிற் றுக்கிழமை அதிகாலை 5 மணி வரையும் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அத்துடன் அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ் வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.