SLC இடைக்கால குழு நியமனத்திற்கான காரணங்களை தெளிவுப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் !

இலங்கையில் கிரிக்கெட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிகளை அடையக்கூடிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பாக இன்று காலை கருத்து தெரிவித்த ரணசிங்க, இரண்டு முக்கிய இலக்குகளை அடையும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக; நடந்த மோசடி மற்றும் ஊழலை விசாரித்து, நாட்டின் விளையாட்டின் நிலையை ஸ்திரப்படுத்தி, கிரிக்கெட்டில் உடனடியாக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்.

மேலும், இடைக்காலக் குழுவின் தலைவராக மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய உறுப்பினர்கள் அதன் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த குழுவின் தலைவராக சரியான நபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். மேலும், கடந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, உப குழுக்களை நியமித்து இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் சட்ட அம்சங்களை முன்னெடுக்குமாறு இடைக்கால குழுவின் தலைவருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாடி மீண்டும் முன்னேறும் சவாலை வெல்வதுதான் முதல் விஷயம். தகுதியானவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நாட்டு மக்கள் என்னுடன் உடன்படுவார்கள் என நான் நினைக்கிறேன், என ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply