
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தோர் மீண்டும் சிறி கொத்தா வந்தால் அவர்களை நான் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை இல்லாமல் செய்வதே தமது நோக்கமாகக் கொண்டவர்கள், வேறு கட்சியில் இணைந்து வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்க முடியும்.
ஆனால் உண்மையான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற பொது பேரணியில் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றும் நாட்டைப் பாதுகாக்கும் திறன் தமது கட்சிக்கே இருப்பதா கவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வேறு கட்சியிலிருந்து போட்டியிடக் கட்சித் தலைமை அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது என்றும் சிலர் கருத்து தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.