யாழ் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞரான சித்தன்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் சித்தன்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, உடல் தகனத்துக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது அப்பகுதி மக்களால் குறித்த கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை. மாறாக, அவர்கள் மீது சந்தேகம் தான் வலுத்து வருகின்றது!, எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். (04)
