19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு ஐசிசி இந்த்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டாலும் இலங்கை அணி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் எனவும் சர்வதேச கிரிக்கட் சபை ஏகமனதாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், கிரிக்கெட் விளையாட்டைத் தொடர அனுமதிக்குமாறு தான் ஐசிசியிடம் கோரிய நிலையில் அந்த கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர் என இலங்கைக் கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply