அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட பரத நாட்டியக் குழு நடனப் போட்டியில் புலியாட்டம் எனும் தலைப்பில் பங்குகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
9,10,11 பிரிவுகளைச் சேர்ந்த சி.கேசிகன், சு.வர்ஜிகன், வா.மேகவன், ரா.பிரகாஷ், இ.கௌதமன், ஶ்ரீ.ஹருணிஷாந், ந.சிபிநயன், கீ.சானுகன், கு.ஜதுர்சயன், ஐ.மதுசாதனன் ஆகிய மாணவர்கள் இந்த நடனக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
நடன நெறியாள்கையை ஆதித்யா ஜெயபாலன், பிரியதர்ஷினி வாகீசன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
அணிசேர் கலைஞர்களாக, நட்டுவாங்கம் – பிரியதர்ஷினி வாகீசன், குரலிசை- க.ரஜீவன், சு. வடிவாம்பிகை, மிருதங்கம் – க.திவ்யாசாகர் (12டி), ஹார்மோனியம் – து.பிரசன்னன் (2022 உ-த) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். (04)