டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

SJBயின் தலைவராக சஜித் பிரேமதாசவும், கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கமகே தனது மனுவில் கோரியிருந்தார்.

சமகி ஜன பலவேகயவின் அரசியலமைப்பின் படி, வேறொரு அரசியல் கட்சியின் உறுப்பினர் சமகி ஜன பலவேகயவில் உறுப்பினராக இருக்க முடியாது என்று மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்பது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறான நிலையில், இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்னும் அங்கம் வகிக்கும் நிலையில், சமகி ஜன பலவேகயவில் பதவிகளை வகிப்பது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டி இடைக்காலத் தீர்ப்பை வழங்குமாறு டயானா கமகே கோரியுள்ளார்.

இதேவேளை, இன்றைய நடவடிக்கைகளின் போது, ​​மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி பதில்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான உத்தரவிட்டார்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதிபதி, மனுதாரர் தனது புகாரில் சில விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளார்.

அதன்படி, சமகி ஜன பலவேகயவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply