சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தி காணொளி எடுத்துவந்த ஆசிரியர்!

நீண்ட நாட்களாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளி எடுத்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுபிட்டி காவல்துறையினர் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு மையத்தின் அதிகாரிகள் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர் எனவும் தெரியவந்துள்ளது.

சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த நபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுவர்கள் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவர் எடுத்த காணொளிகள் சிலவற்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir