தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஆறு வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய, தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கைகளுக்காக அதிகளவான பொலிஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 பேருடன் சேர்த்து 257 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir