பாலியல் இலஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!

பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி கல்முனையிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணிடம், தனக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஈடாக பாலியல் லஞ்சம் கேட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வாரத்திற்கு ஒருமுறை காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைத் தளர்த்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இதனை அடுத்து, குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply