பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அதற்கமைய இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பின்போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தொற்று நோய் தடுப்பு பணிகளின்போது வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்தையின் ஊடாக தமக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், அதுவரையிலும் பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று 11 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பொதுத் தேர்தல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், தமக்கு சட்டரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir