பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரி மாதம் நாடாளுமன்றுக்கு

நீதி அமைச்சர் விஜயதாச தகவல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தச் சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும், இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியானதை அடுத்து திருத்த முன்மொழிவுகள் கோரப்பட்டு, ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அன்றையதினம் இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது, திருத்தங்கள் அடங்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஜனவரியில் சமர்ப்பிக்கவுள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply