பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமக்கான அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18ஆம் திகதி முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் கொரோனா உள்ளிட்ட சகல தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir