இலங்கைக்கு விமானம் வழங்க உள்ள அமெரிக்கா!

இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக,   விமானம் ஒன்றை வழங்க அமெரிக்க அரசு  தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி டொலன்ட் லூ  குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைதினம் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளிர்.

இதேவேளை இலங்கைக்கு கிங் எயார் எனும்  விமானமொன்றே வழங்கப்படவுள்ளதாகவும்  குறித்த விமானம் இந்த வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினருக்கு படகுகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply