கற்பிட்டியில் மீனவர்களுடன் படகு மாயம்!

கற்பிட்டி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை   புறப்பட்ட இழுவை படகு ஒன்று இன்றுவரை காணாமல் போயுள்ளதாக கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடிக் கப்பலின் உரிமையாளரால் அவர்கள் தீவுக்குத் திரும்பவில்லை எனக் கூறி இந்த முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கப்பலில் மூன்று இலங்கை மீனவர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் 21, 37 மற்றும் 38 வயதுடைய ஈச்சங்கடுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கற்பிட்டியில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply