வெடுக்குநாறிமலையில் கைதான எண்மரும் விடுதலை! – வழக்கும் தள்ளுபடி

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜை வழிபாட்டில் தமிழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சப்பாத்துக்கால்களுடன் உட்புகுந்த பொலிஸார், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததுடன் ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைதான 8 பேரும் மறுநாள் 9 ஆம் திகதி வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, 19 ஆம் திகதி (இன்று) வரை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய மேற்படி 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply